நூல் : வன்னியர்

ஆசிரியர் : கலாநிதி சி. பத்மநாதன்

முன்னுரை


தென்னகத்திலும் ஈழத்திலுமிருந்த இராணுவ அமைப்புக்களில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். கல்லாடஞ் சொல்வதுபோல நாற்படையிலும் வன்னியர் சேவை புரிந்து வந்தபோதும் படைகளிலிருந்த வன்னியருட் பலர் வில்லாளிகளாகவே இருந்தனர்.

வன்னியப் படைகளின் தலைவராயிருந்த, வன்னியநாயன் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்ற பிரதானிகள் சோழப் பேரரசிற் சமாந்தரராகி, அப்பேரரசு தளர்வுற்ற காலத்திலே குறுநிலமன்னராக எழுச்சிபெற்றனர். பன்னிரண்டாம் நு}ற்றாண்டிலே தோன்றிய தென்னக வன்னிமைகள் பதினாறாம் நு}ற்றாண்டுவரை நிலைபெற்று வந்தன. விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரின் ஆட்சியிலே தொண்டை மண்டலத்திலுள்ள வன்னிமைகள் அழிந்தொழிந்தன.

பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின்பும் தென்னகத்திலிருந்து வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர்வசமிருந்த படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொலநறுவை அரசு அழிவுற்றதும் வன்னியநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள் எழுச்சிபெற்றுப் பல நு}ற்றாண்டுகளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும வளர்ச்சியடைந்திருந்தன.

இச்சிறு நு}ல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடுகளின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது. வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு என்பவற்றிலுள்ள பிரதான கட்டங்களே நு}லில் விளக்கப்பட்டுள்ளன. இந்நு}லின் இரண்டாம் பதிப்பில் வன்னியநாடுகளின் வரலாறு, சமூக அமைப்பு, சமூக வழமைகள் எனபன விரிவான முறையிலே இடம்பெறும்.

இந்நு}லை எழுதுமாறு ஊக்குவித்து, எழுதிய பின் பல நாட்களாகப் பிரதிகளைப் பார்த்துப் பிழைகளை நீக்கி நு}ல் சிறப்பாக அமைய வழிகாட்டிப் பின் அணிந்துரை அளித்து நு}லை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளுஞ் செய்து பேராதரவளித்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி. சு. வித்தியானந்தன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

கயிலாய வன்னியனார் தர்மசாதனப் பட்டயத்தில் வரும் கிரந்த எழுத்துக்களை இலகுவில் வாசிப்பதற்கும் அதில்வரும் வடமொழிப் பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும் உதவி புரிந்த யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் வித்துவான் இ. பாலசுப்பிரமணியம் (சிறப்புக் கலைமாணி, இலங்கை) அவர்களுக்கும், யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் திரு. வி. சிவசாமி அவர்களுக்கும், அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபர் பண்டிதர் மு. சதாசிவம் அவர்களுக்கும், இந்நு}லைச் செவ்வனே அச்சேற்றிய சைவப்பிரகாச அச்சகத்தாருக்கும் நு}லாசிரியரின் நன்றிகள் பல.

சி. பத்மநாதன்
5-11-70
வரலாற்றுத்துறை,
இலங்கைப்பல்கலைக்கழகம்,
பேராதனை.

0 comments:

Post a Comment

Lunax Free Premium Blogger™ template by Introblogger