அணிந்துரை
கலாநிதி. சு. வித்தியானந்தன்
இலங்கைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைத் தலைவர்.
தமிழ்பேசும் மக்கள் இன்று ஈழத்தின் பல பாகங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் ஈழத்தின் தொல்குடி மக்களாக இருந்தபோதும் இவர்களது வரலாறு இதுவரை ஒழுங்கான முறையில் எழுதப்படவி;ல்லை. தமிழர் அரசர்களாகவும் குறுநில மன்னராகவும் ஈழத்தில் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். இங்கு ஆண்ட குறுநிலமன்னரில் வன்னியர் குறிப்பிடத்தக்கவர்.
இவ்வன்னியர்பற்றிச் சில நு}ல்களும் கட்டுரைகளும் வெளிவந்தபோதும் இதுவரை எவராவது ஈழத்தின் பல பாகங்களிலுமிருந்த வன்னிமைகள்பற்றி ஆராய்ச்சிநு}ல் ஒன்றும் எழுதவில்லை. அடங்காப்பற்று வன்னியர்மட்டும் வன்னியர் அல்லர். திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் போன்ற வேறு பிரதேசங்களிலும் வன்னியர் ஆட்சி இருந்து வந்திருக்கின்றது.
மேலும், வன்னியர் தமிழகத்திலிருந்தே ஈழத்திற்கு வந்தனர். தமிழக வரலாற்றினை எழுதிய ஆசிரியர்கள் கூட அங்கிருந்த வன்னியர் பற்றி ஆராயவில்லை. அவர்கள் அங்கு படைத்தலைவராக இருந்து குறுநில மன்னராக விளங்கிச் சுயாட்சியும் செய்து வந்திருக்கின்றனர். இந்த வரலாறு எந்தத் தென்னிந்திய வரலாற்று நு}லிலும் இடம்பெறவில்லை.
இக்குறைகளை ஓரளவு நீக்கும் முன்னோடி நு}லாக வெளிவந்திருப்பதே ‘வன்னியர்’ எனப் பெயரிய இந்நு}ல். இதன் ஆசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் வன்னியரின் தோற்றத்தினையும் தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள வன்னியரின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாக இதிலே ஆராய்ந்திருக்கின்றார். இதுவரை வெளியிடப்படாத பல பட்டயங்களைத் தமது ஆராய்ச்சிக்குட் பயன்படுத்தியுள்ளார். தமது கூற்றுக்களுக்குத் தக்க ஆதாரங்கள் தந்து இச்சிறு நு}லை எழுதியுள்ளார்.
கலாநிதி பத்மநாதன் அவர்கள் சிறந்த தமிழ் அறிவுடைய வரலாற்று ஆசிரியர். ஈழத்துத் தமிழர் வரலாறு எழுதுவதற்கு மிகுந்த தகுதியுடையவர். யாழ்ப்பாண அரசுபற்றி ஆராய்ச்சி நு}ல் எழுதி இலண்டன் பல்கலைக்கழகக் கலாநிதிப்பட்டம் பெற்றவர். அவர் அக்கலாநிதிப் பட்டத்திற்கு எழுதிய “யாழ்ப்பாண அரசு” என்ற நு}லில் இரண்டாவது இயலில் பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் வன்னித் தலைவரின் எழுச்சியும்பற்றி எழுதியுள்ளார். அதனை அடிப்படையாக வைத்தே இந்நு}ல் ஆக்கப்பட்டுள்ளது.
இந் நு}ல் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. இரண்டாம் பகுதி நு}லாக்கத்திற்குதவிய பட்டயங்களையும் ஆவணங்களையும் கொண்டது. முதலாம் பகுதி வன்னியர் வரலாற்றைக் கூறுவது.
தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள வன்னியர் வரலாறு நான்கு இயல்களில் அமைந்துள்ளது. இவர்களின் தோற்றம் பற்றி இலக்கியம் கொண்டும், தென்னிந்திய வரலாறுகொண்டும் ஆராய்வதே முதலாம் இயல். கல்லாடம். சிலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர் குல நாடகம், வன்னியர் குலக் கலியாணக்கொத்து என்னும் நு}ல்கள் வன்னியர் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கல்லாடம் கூற, ஏனைய நு}ல்கள் வன்னியரை அக்கினி குலச் சத்திரியர் என்றும் யாக அக்கினியிலிருந்து தோன்றினரென்றும் கூறுகின்றன.
விசய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் பின், ஒவ்வொரு சமுகத்தினரும் தத்தம் சமுகத் தொன்மையும் சிறப்பையும் நிலை நாட்ட இதிகாச புராணக் கதைகளைக் கொண்டு நு}ல்கள் இயற்றினார்கள் என்றும், வன்னியர் தம் பழைய வரலாற்றை நிலைநாட்ட இயற்றிய அத்தகைய நு}ல்களே மேலே கூறப்பட்ட நு}ல்கள் என்றும் கலாநிதி பத்மநாதன் கருதுகின்றார். எனினும் அவற்றை ஓரளவு ஆதாரமாகக் கொண்டு வன்னியரின் தோற்றத்தை விளக்கலாமென ஆசிரியர் கொள்கிறார்.
படைக்கலப் பயிற்சியைச் சிறப்புத் தொழிலாக உடைய மக்கட் கூட்டமாகவும் குறுநில மன்னராகவும் இருந்தமையாலேயே அவர்களை இந்நு}ல்கள் சத்திரியரெனக் கூறின. காடவர் எனக் கருதப்படும் வன்ய என்ற வடசொல்லிலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டுமென்றும், ஆதிகாலத்தில் வன்னியர் காடுகள் நிறைந்த முல்லைநிலத்தில் வாழ்ந்தார்கள் என்றும் ஆசிரியர் கொள்கின்றார்.
தமிழகத்து வன்னியர் பற்றித் ‘தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்’ என்ற பிரிவில் ஆசிரியர் கூறுகின்றார். இவர்களின் ஆதி இருப்பிடம் தொண்டை மண்டலம் என்பது அவர் கொள்கை. இதற்கு ஆதாரமாக வன்னியர் வரலாற்றைக்கூறும் நாடோடிக் கதைகளையும் கல்வெட்டுக்களையும் காட்டுகின்றார். காஞ்சியிலிந்து ஆண்ட பல்லவரின் படைகளிற் காடவராகிய வன்னியர் தொழிலாற்றி இருக்கலாமென ஆசிரியர் ஊகிக்கின்றார். சோழப் பெருமன்னர் காலத்திலேயே இவர்களைப்பற்றிய வரிவான சான்றுகள் கிடைத்துள்ளன.
வன்னியர் பற்றியும் வன்னியப் பற்றுக்கள் பற்றியும் பல குறிப்புக்கள் சோழப் பெரு மன்னரின் ஆவணங்களிற் காணப்படுகின்றன. இராணுவ சேவையிலிந்த வன்னியப் படைகளுக்குச் சீவிதமாக விடப்பட்ட நிலங்களே வன்னியப்பற்று என ஆசிரியர் கூறுகின்றார். வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றனர் என்பதற்குச் சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூ10ர் மலையமான்களின் கல்வெட்டுக்களை ஆசிரியர் ஆதாரமாகத் தருகின்றார்.
சோழப்பெருமன்னர் காலத்திற் படைத்தொழிலிற் சிறப்புற்று விளங்கியதுபோல விசயநகரமன்னர் காலத்திற் சிறப்புடன் விளங்க வன்னியரால் முடியவில்லை. காரணம், விசய நகர மன்னர் கன்னட தெலுங்குப் படைகளையே கூடுதலாகப் பயன்படுத்தினர். எனவே, சூழலுக்கு ஏற்ப வன்னியர் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
‘தென்னகத்து வன்னிமைகள்’ எனப் பெயரிய இரண்டாம் இயல், தமிழகத்திலிருந்த வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. முதலாம் இராசேந்திரன் இரண்டாம் இராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களிலிருந்து வன்னியர்கள் பிரதானிகளாக இருந்தனரென அறியலாம். இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் கல்வெட்டுக்களில் வன்னியர் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. இவர்கள் வேளைக்காரரின் படைத்தலைவராக இருந்தனரென்றும், பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடாதான் போன்ற விருதுகளைப் பெற்றிருந்தனரென்றும் கல்வெட்டுக்களால் அறியலாம். இவர்கள் குறுநிலமன்னராகி, முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் பெருமளவு ஆதிக்கம்பெற்று விளங்கினர். சோழப்பெருமன்னர் காலத்திலே, கிழியூர் மலையமன்னர், பங்கலநாட்டுக் கங்கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலத்துக் குறுநிலமன்னர் வன்னிய நாயகன் என்ற விருதுடன் ஆட்சி செலுத்தினரென இக்கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஆசிரியர் நிறுவியுள்ளார்.
வன்னியர்களின் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துவந்தது. சோழப் பேரரசு நலிவுபெற்ற காலத்தில், குறுநிலமன்னராகிய வன்னியர்கள் சுதந்திரமாக ஆளத்தொடங்கினர். சோழராட்சிக்குப்பின் இரண்டாவது பாண்டியப்பேரரசு நிலைபெற்ற காலத்தில் வன்னியர் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தனர். பாண்டியப் பேரரசு தளர்வுற்ற காலத்தில், பாண்டியர்மேல் ஆதிக்கம் செலுத்திய மூன்றாம் வல்லாள தேவனாகிய கொய்சளமன்னனின் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தனர் வன்னியர். விசயநகரமன்னர் காலத்திலே அம்மன்னர்களோடு வன்னியர் போர் நிகழ்த்தித் தோல்வியுற்றனரென ஆசிரியர் பல சான்றுகள் காட்டுகின்றார். கிருஷ்ணதேவராயர் காலத்தை யொட்டித் தமிழகத்து வன்னிமைகள் அரசியல் ஆதிக்கத்திலிருந்து அழிந்தொழிந்தன.
ஈழத்து வன்னிமைகள் இரு பகுதிகளாக இரண்டு இயல்களில் அமைந்துள்ளன. தமிழ், சிங்கள அரசுகளில் வன்னிகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை வன்னிமைகள், முக்குவ வன்னிமைகள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது முதற்பகுதி. இப்பிரிவுகளில் முக்குவ வன்னிமை என்ற பிரிவு மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என்ற இரு உட்பிரிவுகளாக அமைந்துள்ளது.
ஈழத்து வன்னிமைகள் முதலாம் பகுதிகளில், ‘தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்’ என்ற பிரிவில் ஈழநாட்டு வரலாற்றில் பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் வன்னி நாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தமையை ஆசிரியர் கூறுகிறார். பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதினையும் ஒரே மன்னர் ஆண்ட வரலாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்ட கலிங்கமாகனது படையெடுப்போடு முற்றுப்பெறுகின்றது. அதன்பின் வடக்கிலே ஓர் அரசும், தெற்கிலே ஓர் அரசும் பல குறுநில அரசுகளும் தோன்றின. மாகனுக்குப் பின் வட இலங்கையிற் பாண்டியர் ஆதிக்கம் இடம்பெற்றுப் பதின்மூன்று நு}ற்றாண்டின் இறுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி ஆரம்பமாகியது. அதன் விளைவாக இடம்பெற்றதே யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழரசு. இத்தமிழரசின் காலத்திலே பல வன்னிநாடுகள் இருந்தன.
இதே காலத்தில், அதாவது மாகனது ஆட்சிக்குப் பின், பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலிருந்து சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும்@ பின் குருநாகல், கம்பளை கோட்டை முதலிய நகர்களிலிருந்தும் ஆட்சிசெய்தனர். அவ்வாட்சியிலும் வன்னி எனப்பட்ட குறுநில அரசுகள் வளர்ச்சியடைந்திருந்தன.
இவ்வாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஈழத்தில் வன்னிமைகள் பல காணப்பட்டபோதும், அந்நு}ற்றாண்டுக்கு முன்பே வன்னிமைகள் தோன்றியிருந்தன என்பதனை ‘வன்னி நாடுகளின் தோற்றம்’ என்ற பிரிவு விளக்குகின்றது. ஈழத்து வன்னிமைகளின் தோற்றத்தை வேளைக்காரப் படையின் வரலாற்றோடு ஆசிரியர் இணைத்து நோக்குகின்றார். வேளைக்காரப் படைகள் ஈழத்தின் சில பகுதிகளிற் சுயாட்சி நடத்தியமையை நாம் காணலாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்குக் காலாக இருந்தன. சோழராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்பும் வன்னிப் பற்றுக்கள் பல தோன்றிப் பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற் பகுதியில் வளர்ச்சி யடைந்திருந்தன என ஆசிரியர் கூற்றுக்களால் அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு வளர்ச்சியுற்ற வன்னிமைகளில் ஒன்றனைப்பற்றித் ‘திருமலை வன்னிமைகள்’ என்ற பிரிவு கூறுகின்றது. கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். யாழ்ப்பாணத்தரசரும் திருமலை வன்னியரும் போத்துக்கேயரை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் துணையாயிருந்தனர். சங்கிலி அரசனின் மரணத்துக்குப் பின் கண்டியரசரின் ஆதிக்கம் திருகோணமலை வன்னியிலே இடம்பெறலாயிற்று.
முக்குவ வன்னிமைகளை, மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என இரு பிரிவுகளாக ஆசிரியர் வகுத்துக் கூறுகிறார். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் கலிங்க மன்னன் மாகன், முக்குவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவருக்கு வன்னிபம் என்ற பட்டத்தை அளித்தானென மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. சீதவாக்கையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய இஸ்லாமிய குடும்பங்களின் வரலாற்றைக் கூறும் ஓரேட்டுப் பிரிதி, மட்டக்களப்பில் அதிகாரம் செலுத்திய ஏழு வன்னியர்பற்றிக் குறிப்பிடுகின்றது. தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகின்றார்.
‘புத்தளத்து வன்னிமை’ என்னும் பிரிவு, ஒல்லாந்த ராட்சிக்காலம்வரை புத்தளத்திலிருந்த முக்குவ வன்மைபற்றிக் கூறுகின்றது. ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலந்தொட்டுப் புத்தளத்து வன்;னிமைபற்றிக் கிடைத்துள்ள குறிப்புக்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன் (1413 - 1467) புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றிய வரலாறு ‘முக்கர ஹடன’ என்ற நு}லில் விவரிக்கப்படுகின்றது. பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு புத்தளத்தை ஆண்ட நவரத்தின வன்னியன்பற்றியும், நீதிமன்றத்தில் அங்கம் வகுத்த வன்னியர்பற்றியும் வன்னியர் பெற்றிருந்த சிறப்புரிமைகள் பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
நான்காவது இயலாக அமைந்துள்ள ஈழத்து வன்னிமை இரண்டாம் பகுதி, யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய தமிழரசில் அடங்கிய வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்த வன்னிநாடு மன்னாரிலிருந்து திருகோணமலைவரை பரந்திருந்ததென்றும், அதன் எல்லை சிலாபம்வரை இருந்ததென்றும் சான்றுகள் தரப்படுகின்றன. பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பந்து, கிழக்கு மூலை என்பன யாழ்ப்பாணத்து வன்னிக்குடியேற்றங்களில் முக்கியமானவையென குவேறோஸ் கூறுகின்றார். இரு வன்னிக் குடியேற்றங்களைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இரண்டாவது வன்னிக் குடியேற்றம் பாண்டிநாட்டிலிருந்து வந்த 59 வன்னியரின் வருகையோடு ஏற்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்குடியேற்றம் பற்றியே வையாபாடல் என்னுங் நு}லும் கூறுகின்றது.
வையாபாடல் வன்னியர் குடியேற்றம் பற்றிக் கூறுவதை மேற்கோளாகக்காட்டி அமைந்ததே ‘அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்’ என்னும் பிரிவு. வையாபாடல் கூறுவதை முற்றாக ஏற்காதுவிட்டாலும், வன்னியர் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை வரலாற்று நிகழ்ச்சியாக ஆசிரியர் கொள்கி;ன்றார். வையா பாடலில் வரும் நிகழ்ச்சிகள் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்தினை யொட்டியவையெனக் கருதுகின்றார். இவ்வன்னியர் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்டசிங்கையாரியன், சங்கிலி போன்ற பலம்வாய்ந்த யாழ்ப்பாண மன்னருக்குத் திறைகொடுத் ஆண்டனர். எனினும் வன்னியர்கள் சுயாட்சி செலுத்தி, அதிகாரிகளை நியமித்து, இறைவரிகளையும் பெற்றிருந்தனர்.
இந்நு}லிற்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் அளிப்பது இதன் இரண்டாம் பகுதி, நு}ல் ஆக்கத்திற்குதவிய பட்டயங்களும் ஆவணங்களும் இப் பகுதிகளில் அடங்கியுள்ளன. முதலிரு பட்டயங்களையும் முதன் முதல் வெளியிடும் பெருமை ஆசிரியருக்கே உரியது. அப் பட்டயங்கள், பரராசசேகர மகாராசாவின் பட்டயமும், கயிலாய வன்னியனார் மட தர்ம சாதனப் பட்டயமும் ஆகும். இவ்விரு செப்பேடுகளும் படம் பிடித்துப் பிரதி செய்து அச்சில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை இக் கால முறையிற் குறியீடுகளுடன் பிழைகள் நீக்கிப் பதிப்பித்திருக்கின்றார். அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு விளக்கவுரைகள் மிகவும் பயனுள்ளன.
அவ்விரு செப்புப் பட்டயங்களில் பரராசசேகர மகாராசாவின் பட்டயம் யாழ்ப்பாணத்தையாண்ட பரராசசேகர மகாராசா சிதம்பரதரிசனம் செய்து, நிலம் வாங்கிப் பரராசசேகரன் மடத்தை அங்கு அமைத்து, நிவந்தங்களைக் கொடுத்து, யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் வருமானத்தையுங் கொடுத்து, மடதர்ம ஏற்பாடுகள் செய்தமைபற்றிக் கூறுகின்றது. கயிலாய வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயம் சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்திற்கு யாழ்ப்பாண வன்னியர் சென்று, தானம் கொடுத்தமைபற்றியது. பனங்காமம், கரிகட்டுமூலை மேல்பத்து, தென்னமரவடி, முள்ளியவளை ஆகியவற்றின் வன்னியரின் பெயர்களை இப்பட்டயம் தருகின்றது.
இரண்டாம் பகுதியில் வரும் நல்லமாப்பாண வன்னியனின் ஓலையும், வன்னியர்குல மடதர்மசாதனப் பட்டயமும் முன் வெளியானவை, இவற்றுள் நல்லமாப்பாண வன்னியனின் ஓலை முன்பு சுவாமி ஞானப்பிரகாசரால் வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியர் அதனை அவர் வெளியிட்டவாறு தந்து, விரித்து, விளக்கவுரைகூறி, வரலாற்றுக் குறிப்புக்களும் தருகின்றார். வன்னி;யர்குல மட தர்மசாதனப் பட்டயம் முன்பு வன்னியர்புராணம் பதிப்பிக்கப்பட்டபோது அதனோடு இணைத்துப் பதிப்பிக்கப்பட்டது. இந்நு}லிலுள்ள பதிப்பில் ஆசிரியர் விளக்கவுரைகூறி, பட்டயத்தில் வரும் வரலாற்றைச் சிலை எழுபது, வன்னியர் புராணம் ஆகிய நு}ல்களில் வரும் வரலாற்றோடு ஒப்புநோக்குகின்றார்.
இந்நு}ல் வன்னியர் பற்றிய சிறியநு}ல்@ ஆயினும் சிறந்த படைப்பு, ஆசிரியரின் முதல்நு}ல்@ வரலாற்று நு}ல்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன்மாதிரி, ஈழத்துத் தமிழரின் வரலாற்றை அறிவதற்குரிய சிறந்த வரலாற்று நு}ல்கள் இல்லையே என்ற குறையை இந்நு}ல் ஓரளவு நீக்குகின்றது@ அவரின் முயற்சிகள் பிறரையும் இத்துறையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
ஈழத்து எழுத்தாளர் இன்று ஒரு வழிப்புணர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமது படைப்புக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் வாசகரின் ஒத்துழைப்பும் பெருமளவு கிடைக்கும் என்ற அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய சூழலிலே, முக்கியமான ஒரு துறையிலே, தேவைக்கேற்ற நு}லைக் கலாநிதி பத்மநாதன் படைத்திருக்கின்றார். இந்நு}ல் விரித்து எழுதப்பட வேண்டியது. ஈழத்து வன்னியர்பற்றிய பெரிய நு}லினையும், வேறுபல வரலாற்று நு}ல்களையும் அவர் எமக்கு ஆக்கித்தருவதற்கு நன்மக்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் அன்னாருக்கு நிறைய அளிப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.
இலங்கைப் பல்கலைக்கழகம், சு. வித்தியானந்தன்
15 comments:
தஞ்சை கோவை பகுதியில் பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று இதில் கள்ளர்களை இவர்கள் வீட்டுக்குள் நீங்கள் விடமாட்டார்களாம். நல்ல யோசிச்சு எதாவது சொல்லு.
முக்குலத்தோர் வரலாற்றை திருடும் வன்னியர்கள் :
800 வருடங்களாக நாயக்கர் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தா வன்னியர்கள் மன்னர் பரம்பரையா மற்றும் சத்திரியனா? இங்கு முக்குலத்தோர் மட்டுமே மன்னர் இனம் என்று சொல் வதற்கு ஏற்றார் போல் வாழ்ந்த இனம், முக்குலத்தோர் மன்னர்கள் நாயக்கர்களுக்கு அடங்காது எதிர்த்து விரட்டிய 14, 15 ம் நூற்றண்டில் சேதுபதி மன்னர்கள், கள்ளர் நாடு அம்பலகாரர்கள் ,16ம் நூற்றாண்டில் தொண்டைமான், சேதுபதிகள் , 17 ம் நூற்றண்டில் வெள்ளையர்களை விரட்டியடித்த பூலித்தேவர்,வெள்ளைய தேவன் , கள்ளர் நாடு அம்பலகாரர்கள், மறவர் நாட்டு பாளையத்தார்கள் ,18 ம் நூற்றண்டில் வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம், 19 ம் நூற்றண்டில் மறவர் நாட்டு பாளையத்தார்கள், கள்ளர் நாடு அம்பலகாரர்கள், இராமு தேவர் மற்றும் ஜானகி தேவர் (நேதாஜி ஆர்மி ) இன்னும் பல நூறு பேர்கள் , இவர்கள் யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் (அதுக்காக கிடைத்த பரிசு குற்ற பரம்பரை சட்டம் ), ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா? , இந்த 800 வருடங்களாக வன்னியர் சாதியினர் எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்;
800 வருடங்கள் முன் சோழர்கள் பாண்டிய பல்லவ சேர சாளுக்கிய, சிங்களவர் கலப்பு திருமணம் நடந்தது, இதில் எங்கே சாதி வந்தது,
முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல் சிலையெழுபது. இவர்கள் கருணாகரத் தொண்டைமான் (இவன் பல்லவன்) முதலாம் குலோத்துங்க சோழரின் (இவன் சாளுக்கிய கலப்பு ) படைத்தளபதி வன்னியர் குலம் என்று சொல்கிறார்கள் அனால் அரசனும் வன்னியரா எப்படி, பல்லவர் வன்னியர் குலம் என்றால் சோழ சேர பாண்டிய மன்னர்கள் எப்படி வன்னியர்கள் ஆவர்.
வன்னியர் குலம் என்பது வன்னியரா? ஆமாம் அப்போ பள்ளி, படையாச்சி அதுவும் தான், அப்போ சூர்ய, சந்திர, அக்கினி, ருத்ர, இந்திர, வன்னிய குலமா? ஆமாம் எல்லாம் வன்னியர்களுக்கு உள்ளது மற்ற சாதியினர்க்கு உள்ள வன்னியர் பட்டம்? அதுவும் எங்களுக்கு உள்ளதுதான் அது திருடப்பட்டது
அப்ப சோழ, சேர, பாண்டிய, பல்லவ எல்லாரும்? அதுவும் நாங்கள் தான் , நீங்கள் கடந்த 800 வருடங்களாக எங்க இருந்திங்க, அது வந்து அது வந்து முக்குலத்தோர் ஜமீன்களை யும் பபட்டங்களையும் எப்படி திருடுவதுனு இருந்தோம். அது சரி
வன்னியன் உங்களுக்கு 100 அல்லது 150 பட்டம் இருக்கலாம் ஆனால முக்குலத்தோர்க்கு 2000 பட்டம் உள்ளது அது வன்னியர் களிடம் இருந்து திருடியதாக சொல்லுறிங்க ஆனால 80 % வன்னியர்களுக்கு பட்டமே இல்லையே, அதுவதான் முக்குலத்தோர் திருடினார்களா. டேய் உங்கள் அக்கப்போருக்கு அளவேயில்லையா,
நீங்கள் என்னதான் முக்கினாலும் வன்னியர் ராசாவா ஆகமுடியாது
Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya;
ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் போற்குடிகள் முக்குலத்தோர் மட்டுமே . வன்னியர் 1871 ல் புள்ளிவிவர கணக்கெடுக்கும் போது, தங்களை சத்திரியர் என்று வகைப்படுத்த கெஞ்சி-மன்றாடி கோரிக்கை வைத்தனர்.
இங்கு வன்னி-வன்னியன், மள்ளர் -மல்லர், மறவர் - கள்ளர் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மன்னரை மட்டும் குறிக்கும் சாதியை அல்ல
வன்னியர்கள் இப்போது சொல்ல வரலாறு இல்லை அதான் வாரிசுகள் இல்லாத மறவர் கள்ளர் ஜமீன்களை தங்களுடைய திருட்டு வரலாறு க்கு சேர்த்துக் கொண்டு மேலும் கள்ளர் பட்டங்களான வன்னியர், கொங்கரையர் மற்றும் மறவர் பட்டங்களான வன்னியனார் தங்களுடையது என்று கூறுவது மிகவும் கேவலமாக இருக்கிறது.
முக்குலத்தோர் வன்னியர் ஜமீன்கள் கீழே இருந்தார்களாம் இவர்கள் நாயக்கர் ஜமீன்கள் கீழே மட்டுமே சில இடங்களில் இருந்திருக்கிறார்கள் ஆனால் வன்னியர்களுக்கு கீழ் கண்டிப்பாக இல்லை
வ.சூரக்குடி முக்குலத்தோர் வழி வந்தவர்களை அவர்களும் வன்னியர் எனறு கூறும் கேவலமான செயல், மேலும் தலைவன் கோட்டை, ஏழாயிரம் பண்ணை ஜமீன்கள் தங்களது என்று முக்குலத்தோர் ஜமீன்களை திருடுவது.
மேலும் நீங்கள் சொல்லும் கதைக்கு ஒரு உதாரணம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-
"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"
இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள் குறிப்பாக "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 05/2004, லில் இருந்து நமக்கு தெளிவாக தெரியவருகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்).
"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"
இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.
எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது. "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும். அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும்.
மேலும் கள்ளர் சமூகத்தவர்களான "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தென்னிந்திய கல்வெட்டு தொகுதியில் (S.I.I. Vol-XIII) இருந்து குறிப்பிடுவதும் தவறானதாகும். சில கல்வெட்டுகள் "பெரும்பிடுகு முத்தரைய மன்னரை" குறிப்பதாகும். அதே போல தருமபுரி கல்வெட்டும் "ஒருவருடைய பெயரையே" அது தெரிவிக்கிறது.
// இப்படி மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிங்க, கொங்கரையர் பட்டம் கள்ளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது ஒரு வன்னியர் கூட இல்லை மேலும் அதில் உள்ள பள்ளி என்பது இடத்தை குறிக்கும் சாதியை அல்ல.
சரியான விளக்கம் கிழே :
கலிக்கம்பசேரியில் வாழும் கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்
சிவகிரி ஜமீன் வாரிசு நான் மறவர் என்று அவர் சொல்லிய பிறகும் அதற்கு ஓரு கதை சொல்வது.
வன்னியர்கள் வடக்கில் ஏதாவது உங்கள் வீர வரலாறு சோல்வதற்க்கு இருக்கா என்று பாருங்கள், பிச்சாவரம் ஜமீன் (இவர்களுக்கு வீர வரலாறு ஓன்றும் இல்லை) பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் என்று பெருமை பேசலாம் ஆனால் அதுவே 18 ம் நூற்றண்டில் அவர்களுக்கு வந்தது அதர்க்கு முன் இல்லை. இந்த கோவிலில் உள்ள நடராசர் எத்தனையோ நுற்றாண்டு மதுரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார்.
மேலும்
தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)
//தஞ்சை கோவை பகுதியில் பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று இதில் கள்ளர்களை இவர்கள் வீட்டுக்குள் நீங்கள் விடமாட்டார்களாம். நல்ல யோசிச்சு எதாவது சொல்லு.//
கோவை பகுதில் உள்ள வெள்ளாரை வெள்ளாள பசங்க என்றும் தஞ்சை பகுதில் உங்களை கள்ள பசங்க திருட்டு பசங்க என்று வன்னியர் திட்டுவதை மறந்தீர்களோ.
CRT ma
பாலை நில திருடர்கள் இந்திரன் வைப்பாட்டி அகல்யை மகன்கள் யார்
இப்ப நிங்க தஞ்சாவூர் ல இருந்தா சோழர் ஆயிடுவிங்களா அப்ப மற்ற சோழ தலைநகர் பூம்புகார் பழையறை கடைசி தலைநகர் கங்கை கொண்டம் சுற்றி வாழ்வது வன்னியன்டா நீங்க தஞ்சைக்கு 1900 பஞ்சம் பிழைக்க வந்துட்டு இருந்த வெள்ளாளர் நிலத்த திருடி பிழைப்பு நடத்திருங்க நீங்க எங்கள பேச என்ன தகுதி இருக்கு
வீர வரலாரா வேலு நாட்சி மருது நாட்ட காப்பாத்த வெள்ளையன எதிர்கள தெலுங்கு நாயக்கர் கைக்கூலியா இருந்து அவர்களுக்காக ஆங்கிலேயர எதிர்தாங்க பார்ப்பன் வெள்ளகாரனுக்கு காட்டி கொடுத்தான் கூட்டியும் கொடுத்தான் அதே போல நாயக்கருக்கு நீங்க செய்து 13 நுற்றாண்டு பிறகு நாயக்கர் போட்ட பிச்சை நிலத்த ஆண்டா நீங்க ஆண்ட வீர பரம்பரையா அந்த நாயக்கரை தமிழகத்துக்குள் வர விடாமல் எதிர்த்து முதலில் போரிட்டது காஞ்சி ஆண்ட காந்தவராயன் சேந்தவராயன் இரட்டை சகோதர வன்னிய சிற்றரசர்கள் நாயக்கரை எதிர்த்ததால் நாங்கள் செல்வாக்கிழந்தோம் ஆனால் நீங்கள் நாயக்கர் அடிமையாக இருந்ததால் செல்வாக்கு பெற்றிங்க
Madras prisidency orunkinainda tanjore nagai trivarur muttupet Sirkazhi kumbakonam 1891 caste censex kallar 7 % but 1921 caste censex 13 % தெற்கத்தி கள்ளா பிழைக்க பாலை to மருதம்
முதலில் நீங்க பாண்டியரா வரலாறே நாடார் அல்லது பள்ளர் தான் பாண்டியர் என்று சொல்லுது அதை முதல்ல நிருபிங்க
அதே புத்தி முன்னால் முதலமைச்சர் வீட்டுக்கு எதுக்கு போனிங்க நக்குரத்துக்கு போய் அதிகாரத்துக்கு வர நினைக்கிரீங்க
முதல்ல உங்க சூத்து உள்ள கரைக்கு பதில் சொல்லுங்க பிறகு எங்க சூத்த பார்க்கலாம்
நாடு பிரித்து கொள்ளை அடிக்கிறது பாலை நிலத்ததுடா மருத நிலத்துல ஏதுடா நாடு வரலார ஒங்கல மாதிரி யாரும் திருட முடியாது ஏன்னா பிறப்பிலேயே திருடன்ல
சேதுபதி மதுரை நாயக்கர் அடிமையா ஆண்டார்
இதுல எங்கள பார்த்து நீ பேசுர நீ தேவர் கோட்டைனு பீத்துர மதுரைய நாயக்கர் எப்படி ஆண்டான் அப்ப நீங்க அயல்நாட்ல இருந்திங்களா யாருகிட்ட வரலாறு பேசுர
Post a Comment