அணிந்துரை
கலாநிதி. சு. வித்தியானந்தன்
இலங்கைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைத் தலைவர்.
தமிழ்பேசும் மக்கள் இன்று ஈழத்தின் பல பாகங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் ஈழத்தின் தொல்குடி மக்களாக இருந்தபோதும் இவர்களது வரலாறு இதுவரை ஒழுங்கான முறையில் எழுதப்படவி;ல்லை. தமிழர் அரசர்களாகவும் குறுநில மன்னராகவும் ஈழத்தில் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். இங்கு ஆண்ட குறுநிலமன்னரில் வன்னியர் குறிப்பிடத்தக்கவர்.
இவ்வன்னியர்பற்றிச் சில நு}ல்களும் கட்டுரைகளும் வெளிவந்தபோதும் இதுவரை எவராவது ஈழத்தின் பல பாகங்களிலுமிருந்த வன்னிமைகள்பற்றி ஆராய்ச்சிநு}ல் ஒன்றும் எழுதவில்லை. அடங்காப்பற்று வன்னியர்மட்டும் வன்னியர் அல்லர். திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் போன்ற வேறு பிரதேசங்களிலும் வன்னியர் ஆட்சி இருந்து வந்திருக்கின்றது.
மேலும், வன்னியர் தமிழகத்திலிருந்தே ஈழத்திற்கு வந்தனர். தமிழக வரலாற்றினை எழுதிய ஆசிரியர்கள் கூட அங்கிருந்த வன்னியர் பற்றி ஆராயவில்லை. அவர்கள் அங்கு படைத்தலைவராக இருந்து குறுநில மன்னராக விளங்கிச் சுயாட்சியும் செய்து வந்திருக்கின்றனர். இந்த வரலாறு எந்தத் தென்னிந்திய வரலாற்று நு}லிலும் இடம்பெறவில்லை.
இக்குறைகளை ஓரளவு நீக்கும் முன்னோடி நு}லாக வெளிவந்திருப்பதே ‘வன்னியர்’ எனப் பெயரிய இந்நு}ல். இதன் ஆசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் வன்னியரின் தோற்றத்தினையும் தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள வன்னியரின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாக இதிலே ஆராய்ந்திருக்கின்றார். இதுவரை வெளியிடப்படாத பல பட்டயங்களைத் தமது ஆராய்ச்சிக்குட் பயன்படுத்தியுள்ளார். தமது கூற்றுக்களுக்குத் தக்க ஆதாரங்கள் தந்து இச்சிறு நு}லை எழுதியுள்ளார்.
கலாநிதி பத்மநாதன் அவர்கள் சிறந்த தமிழ் அறிவுடைய வரலாற்று ஆசிரியர். ஈழத்துத் தமிழர் வரலாறு எழுதுவதற்கு மிகுந்த தகுதியுடையவர். யாழ்ப்பாண அரசுபற்றி ஆராய்ச்சி நு}ல் எழுதி இலண்டன் பல்கலைக்கழகக் கலாநிதிப்பட்டம் பெற்றவர். அவர் அக்கலாநிதிப் பட்டத்திற்கு எழுதிய “யாழ்ப்பாண அரசு” என்ற நு}லில் இரண்டாவது இயலில் பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் வன்னித் தலைவரின் எழுச்சியும்பற்றி எழுதியுள்ளார். அதனை அடிப்படையாக வைத்தே இந்நு}ல் ஆக்கப்பட்டுள்ளது.
இந் நு}ல் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. இரண்டாம் பகுதி நு}லாக்கத்திற்குதவிய பட்டயங்களையும் ஆவணங்களையும் கொண்டது. முதலாம் பகுதி வன்னியர் வரலாற்றைக் கூறுவது.
தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள வன்னியர் வரலாறு நான்கு இயல்களில் அமைந்துள்ளது. இவர்களின் தோற்றம் பற்றி இலக்கியம் கொண்டும், தென்னிந்திய வரலாறுகொண்டும் ஆராய்வதே முதலாம் இயல். கல்லாடம். சிலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர் குல நாடகம், வன்னியர் குலக் கலியாணக்கொத்து என்னும் நு}ல்கள் வன்னியர் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கல்லாடம் கூற, ஏனைய நு}ல்கள் வன்னியரை அக்கினி குலச் சத்திரியர் என்றும் யாக அக்கினியிலிருந்து தோன்றினரென்றும் கூறுகின்றன.
விசய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் பின், ஒவ்வொரு சமுகத்தினரும் தத்தம் சமுகத் தொன்மையும் சிறப்பையும் நிலை நாட்ட இதிகாச புராணக் கதைகளைக் கொண்டு நு}ல்கள் இயற்றினார்கள் என்றும், வன்னியர் தம் பழைய வரலாற்றை நிலைநாட்ட இயற்றிய அத்தகைய நு}ல்களே மேலே கூறப்பட்ட நு}ல்கள் என்றும் கலாநிதி பத்மநாதன் கருதுகின்றார். எனினும் அவற்றை ஓரளவு ஆதாரமாகக் கொண்டு வன்னியரின் தோற்றத்தை விளக்கலாமென ஆசிரியர் கொள்கிறார்.
படைக்கலப் பயிற்சியைச் சிறப்புத் தொழிலாக உடைய மக்கட் கூட்டமாகவும் குறுநில மன்னராகவும் இருந்தமையாலேயே அவர்களை இந்நு}ல்கள் சத்திரியரெனக் கூறின. காடவர் எனக் கருதப்படும் வன்ய என்ற வடசொல்லிலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டுமென்றும், ஆதிகாலத்தில் வன்னியர் காடுகள் நிறைந்த முல்லைநிலத்தில் வாழ்ந்தார்கள் என்றும் ஆசிரியர் கொள்கின்றார்.
தமிழகத்து வன்னியர் பற்றித் ‘தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்’ என்ற பிரிவில் ஆசிரியர் கூறுகின்றார். இவர்களின் ஆதி இருப்பிடம் தொண்டை மண்டலம் என்பது அவர் கொள்கை. இதற்கு ஆதாரமாக வன்னியர் வரலாற்றைக்கூறும் நாடோடிக் கதைகளையும் கல்வெட்டுக்களையும் காட்டுகின்றார். காஞ்சியிலிந்து ஆண்ட பல்லவரின் படைகளிற் காடவராகிய வன்னியர் தொழிலாற்றி இருக்கலாமென ஆசிரியர் ஊகிக்கின்றார். சோழப் பெருமன்னர் காலத்திலேயே இவர்களைப்பற்றிய வரிவான சான்றுகள் கிடைத்துள்ளன.
வன்னியர் பற்றியும் வன்னியப் பற்றுக்கள் பற்றியும் பல குறிப்புக்கள் சோழப் பெரு மன்னரின் ஆவணங்களிற் காணப்படுகின்றன. இராணுவ சேவையிலிந்த வன்னியப் படைகளுக்குச் சீவிதமாக விடப்பட்ட நிலங்களே வன்னியப்பற்று என ஆசிரியர் கூறுகின்றார். வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றனர் என்பதற்குச் சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூ10ர் மலையமான்களின் கல்வெட்டுக்களை ஆசிரியர் ஆதாரமாகத் தருகின்றார்.
சோழப்பெருமன்னர் காலத்திற் படைத்தொழிலிற் சிறப்புற்று விளங்கியதுபோல விசயநகரமன்னர் காலத்திற் சிறப்புடன் விளங்க வன்னியரால் முடியவில்லை. காரணம், விசய நகர மன்னர் கன்னட தெலுங்குப் படைகளையே கூடுதலாகப் பயன்படுத்தினர். எனவே, சூழலுக்கு ஏற்ப வன்னியர் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
‘தென்னகத்து வன்னிமைகள்’ எனப் பெயரிய இரண்டாம் இயல், தமிழகத்திலிருந்த வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. முதலாம் இராசேந்திரன் இரண்டாம் இராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களிலிருந்து வன்னியர்கள் பிரதானிகளாக இருந்தனரென அறியலாம். இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் கல்வெட்டுக்களில் வன்னியர் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. இவர்கள் வேளைக்காரரின் படைத்தலைவராக இருந்தனரென்றும், பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடாதான் போன்ற விருதுகளைப் பெற்றிருந்தனரென்றும் கல்வெட்டுக்களால் அறியலாம். இவர்கள் குறுநிலமன்னராகி, முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் பெருமளவு ஆதிக்கம்பெற்று விளங்கினர். சோழப்பெருமன்னர் காலத்திலே, கிழியூர் மலையமன்னர், பங்கலநாட்டுக் கங்கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலத்துக் குறுநிலமன்னர் வன்னிய நாயகன் என்ற விருதுடன் ஆட்சி செலுத்தினரென இக்கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஆசிரியர் நிறுவியுள்ளார்.
வன்னியர்களின் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துவந்தது. சோழப் பேரரசு நலிவுபெற்ற காலத்தில், குறுநிலமன்னராகிய வன்னியர்கள் சுதந்திரமாக ஆளத்தொடங்கினர். சோழராட்சிக்குப்பின் இரண்டாவது பாண்டியப்பேரரசு நிலைபெற்ற காலத்தில் வன்னியர் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தனர். பாண்டியப் பேரரசு தளர்வுற்ற காலத்தில், பாண்டியர்மேல் ஆதிக்கம் செலுத்திய மூன்றாம் வல்லாள தேவனாகிய கொய்சளமன்னனின் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தனர் வன்னியர். விசயநகரமன்னர் காலத்திலே அம்மன்னர்களோடு வன்னியர் போர் நிகழ்த்தித் தோல்வியுற்றனரென ஆசிரியர் பல சான்றுகள் காட்டுகின்றார். கிருஷ்ணதேவராயர் காலத்தை யொட்டித் தமிழகத்து வன்னிமைகள் அரசியல் ஆதிக்கத்திலிருந்து அழிந்தொழிந்தன.
ஈழத்து வன்னிமைகள் இரு பகுதிகளாக இரண்டு இயல்களில் அமைந்துள்ளன. தமிழ், சிங்கள அரசுகளில் வன்னிகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை வன்னிமைகள், முக்குவ வன்னிமைகள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது முதற்பகுதி. இப்பிரிவுகளில் முக்குவ வன்னிமை என்ற பிரிவு மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என்ற இரு உட்பிரிவுகளாக அமைந்துள்ளது.
ஈழத்து வன்னிமைகள் முதலாம் பகுதிகளில், ‘தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்’ என்ற பிரிவில் ஈழநாட்டு வரலாற்றில் பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் வன்னி நாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தமையை ஆசிரியர் கூறுகிறார். பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதினையும் ஒரே மன்னர் ஆண்ட வரலாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்ட கலிங்கமாகனது படையெடுப்போடு முற்றுப்பெறுகின்றது. அதன்பின் வடக்கிலே ஓர் அரசும், தெற்கிலே ஓர் அரசும் பல குறுநில அரசுகளும் தோன்றின. மாகனுக்குப் பின் வட இலங்கையிற் பாண்டியர் ஆதிக்கம் இடம்பெற்றுப் பதின்மூன்று நு}ற்றாண்டின் இறுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி ஆரம்பமாகியது. அதன் விளைவாக இடம்பெற்றதே யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழரசு. இத்தமிழரசின் காலத்திலே பல வன்னிநாடுகள் இருந்தன.
இதே காலத்தில், அதாவது மாகனது ஆட்சிக்குப் பின், பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலிருந்து சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும்@ பின் குருநாகல், கம்பளை கோட்டை முதலிய நகர்களிலிருந்தும் ஆட்சிசெய்தனர். அவ்வாட்சியிலும் வன்னி எனப்பட்ட குறுநில அரசுகள் வளர்ச்சியடைந்திருந்தன.
இவ்வாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஈழத்தில் வன்னிமைகள் பல காணப்பட்டபோதும், அந்நு}ற்றாண்டுக்கு முன்பே வன்னிமைகள் தோன்றியிருந்தன என்பதனை ‘வன்னி நாடுகளின் தோற்றம்’ என்ற பிரிவு விளக்குகின்றது. ஈழத்து வன்னிமைகளின் தோற்றத்தை வேளைக்காரப் படையின் வரலாற்றோடு ஆசிரியர் இணைத்து நோக்குகின்றார். வேளைக்காரப் படைகள் ஈழத்தின் சில பகுதிகளிற் சுயாட்சி நடத்தியமையை நாம் காணலாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்குக் காலாக இருந்தன. சோழராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்பும் வன்னிப் பற்றுக்கள் பல தோன்றிப் பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற் பகுதியில் வளர்ச்சி யடைந்திருந்தன என ஆசிரியர் கூற்றுக்களால் அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு வளர்ச்சியுற்ற வன்னிமைகளில் ஒன்றனைப்பற்றித் ‘திருமலை வன்னிமைகள்’ என்ற பிரிவு கூறுகின்றது. கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். யாழ்ப்பாணத்தரசரும் திருமலை வன்னியரும் போத்துக்கேயரை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் துணையாயிருந்தனர். சங்கிலி அரசனின் மரணத்துக்குப் பின் கண்டியரசரின் ஆதிக்கம் திருகோணமலை வன்னியிலே இடம்பெறலாயிற்று.
முக்குவ வன்னிமைகளை, மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என இரு பிரிவுகளாக ஆசிரியர் வகுத்துக் கூறுகிறார். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் கலிங்க மன்னன் மாகன், முக்குவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவருக்கு வன்னிபம் என்ற பட்டத்தை அளித்தானென மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. சீதவாக்கையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய இஸ்லாமிய குடும்பங்களின் வரலாற்றைக் கூறும் ஓரேட்டுப் பிரிதி, மட்டக்களப்பில் அதிகாரம் செலுத்திய ஏழு வன்னியர்பற்றிக் குறிப்பிடுகின்றது. தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகின்றார்.
‘புத்தளத்து வன்னிமை’ என்னும் பிரிவு, ஒல்லாந்த ராட்சிக்காலம்வரை புத்தளத்திலிருந்த முக்குவ வன்மைபற்றிக் கூறுகின்றது. ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலந்தொட்டுப் புத்தளத்து வன்;னிமைபற்றிக் கிடைத்துள்ள குறிப்புக்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன் (1413 - 1467) புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றிய வரலாறு ‘முக்கர ஹடன’ என்ற நு}லில் விவரிக்கப்படுகின்றது. பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு புத்தளத்தை ஆண்ட நவரத்தின வன்னியன்பற்றியும், நீதிமன்றத்தில் அங்கம் வகுத்த வன்னியர்பற்றியும் வன்னியர் பெற்றிருந்த சிறப்புரிமைகள் பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
நான்காவது இயலாக அமைந்துள்ள ஈழத்து வன்னிமை இரண்டாம் பகுதி, யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய தமிழரசில் அடங்கிய வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்த வன்னிநாடு மன்னாரிலிருந்து திருகோணமலைவரை பரந்திருந்ததென்றும், அதன் எல்லை சிலாபம்வரை இருந்ததென்றும் சான்றுகள் தரப்படுகின்றன. பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பந்து, கிழக்கு மூலை என்பன யாழ்ப்பாணத்து வன்னிக்குடியேற்றங்களில் முக்கியமானவையென குவேறோஸ் கூறுகின்றார். இரு வன்னிக் குடியேற்றங்களைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இரண்டாவது வன்னிக் குடியேற்றம் பாண்டிநாட்டிலிருந்து வந்த 59 வன்னியரின் வருகையோடு ஏற்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்குடியேற்றம் பற்றியே வையாபாடல் என்னுங் நு}லும் கூறுகின்றது.
வையாபாடல் வன்னியர் குடியேற்றம் பற்றிக் கூறுவதை மேற்கோளாகக்காட்டி அமைந்ததே ‘அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்’ என்னும் பிரிவு. வையாபாடல் கூறுவதை முற்றாக ஏற்காதுவிட்டாலும், வன்னியர் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை வரலாற்று நிகழ்ச்சியாக ஆசிரியர் கொள்கி;ன்றார். வையா பாடலில் வரும் நிகழ்ச்சிகள் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்தினை யொட்டியவையெனக் கருதுகின்றார். இவ்வன்னியர் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்டசிங்கையாரியன், சங்கிலி போன்ற பலம்வாய்ந்த யாழ்ப்பாண மன்னருக்குத் திறைகொடுத் ஆண்டனர். எனினும் வன்னியர்கள் சுயாட்சி செலுத்தி, அதிகாரிகளை நியமித்து, இறைவரிகளையும் பெற்றிருந்தனர்.
இந்நு}லிற்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் அளிப்பது இதன் இரண்டாம் பகுதி, நு}ல் ஆக்கத்திற்குதவிய பட்டயங்களும் ஆவணங்களும் இப் பகுதிகளில் அடங்கியுள்ளன. முதலிரு பட்டயங்களையும் முதன் முதல் வெளியிடும் பெருமை ஆசிரியருக்கே உரியது. அப் பட்டயங்கள், பரராசசேகர மகாராசாவின் பட்டயமும், கயிலாய வன்னியனார் மட தர்ம சாதனப் பட்டயமும் ஆகும். இவ்விரு செப்பேடுகளும் படம் பிடித்துப் பிரதி செய்து அச்சில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை இக் கால முறையிற் குறியீடுகளுடன் பிழைகள் நீக்கிப் பதிப்பித்திருக்கின்றார். அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு விளக்கவுரைகள் மிகவும் பயனுள்ளன.
அவ்விரு செப்புப் பட்டயங்களில் பரராசசேகர மகாராசாவின் பட்டயம் யாழ்ப்பாணத்தையாண்ட பரராசசேகர மகாராசா சிதம்பரதரிசனம் செய்து, நிலம் வாங்கிப் பரராசசேகரன் மடத்தை அங்கு அமைத்து, நிவந்தங்களைக் கொடுத்து, யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் வருமானத்தையுங் கொடுத்து, மடதர்ம ஏற்பாடுகள் செய்தமைபற்றிக் கூறுகின்றது. கயிலாய வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயம் சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்திற்கு யாழ்ப்பாண வன்னியர் சென்று, தானம் கொடுத்தமைபற்றியது. பனங்காமம், கரிகட்டுமூலை மேல்பத்து, தென்னமரவடி, முள்ளியவளை ஆகியவற்றின் வன்னியரின் பெயர்களை இப்பட்டயம் தருகின்றது.
இரண்டாம் பகுதியில் வரும் நல்லமாப்பாண வன்னியனின் ஓலையும், வன்னியர்குல மடதர்மசாதனப் பட்டயமும் முன் வெளியானவை, இவற்றுள் நல்லமாப்பாண வன்னியனின் ஓலை முன்பு சுவாமி ஞானப்பிரகாசரால் வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியர் அதனை அவர் வெளியிட்டவாறு தந்து, விரித்து, விளக்கவுரைகூறி, வரலாற்றுக் குறிப்புக்களும் தருகின்றார். வன்னி;யர்குல மட தர்மசாதனப் பட்டயம் முன்பு வன்னியர்புராணம் பதிப்பிக்கப்பட்டபோது அதனோடு இணைத்துப் பதிப்பிக்கப்பட்டது. இந்நு}லிலுள்ள பதிப்பில் ஆசிரியர் விளக்கவுரைகூறி, பட்டயத்தில் வரும் வரலாற்றைச் சிலை எழுபது, வன்னியர் புராணம் ஆகிய நு}ல்களில் வரும் வரலாற்றோடு ஒப்புநோக்குகின்றார்.
இந்நு}ல் வன்னியர் பற்றிய சிறியநு}ல்@ ஆயினும் சிறந்த படைப்பு, ஆசிரியரின் முதல்நு}ல்@ வரலாற்று நு}ல்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன்மாதிரி, ஈழத்துத் தமிழரின் வரலாற்றை அறிவதற்குரிய சிறந்த வரலாற்று நு}ல்கள் இல்லையே என்ற குறையை இந்நு}ல் ஓரளவு நீக்குகின்றது@ அவரின் முயற்சிகள் பிறரையும் இத்துறையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
ஈழத்து எழுத்தாளர் இன்று ஒரு வழிப்புணர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமது படைப்புக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் வாசகரின் ஒத்துழைப்பும் பெருமளவு கிடைக்கும் என்ற அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய சூழலிலே, முக்கியமான ஒரு துறையிலே, தேவைக்கேற்ற நு}லைக் கலாநிதி பத்மநாதன் படைத்திருக்கின்றார். இந்நு}ல் விரித்து எழுதப்பட வேண்டியது. ஈழத்து வன்னியர்பற்றிய பெரிய நு}லினையும், வேறுபல வரலாற்று நு}ல்களையும் அவர் எமக்கு ஆக்கித்தருவதற்கு நன்மக்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் அன்னாருக்கு நிறைய அளிப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.
இலங்கைப் பல்கலைக்கழகம், சு. வித்தியானந்தன்
நூல் : வன்னியர்
ஆசிரியர் : கலாநிதி சி. பத்மநாதன்
முன்னுரை
தென்னகத்திலும் ஈழத்திலுமிருந்த இராணுவ அமைப்புக்களில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். கல்லாடஞ் சொல்வதுபோல நாற்படையிலும் வன்னியர் சேவை புரிந்து வந்தபோதும் படைகளிலிருந்த வன்னியருட் பலர் வில்லாளிகளாகவே இருந்தனர்.
வன்னியப் படைகளின் தலைவராயிருந்த, வன்னியநாயன் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்ற பிரதானிகள் சோழப் பேரரசிற் சமாந்தரராகி, அப்பேரரசு தளர்வுற்ற காலத்திலே குறுநிலமன்னராக எழுச்சிபெற்றனர். பன்னிரண்டாம் நு}ற்றாண்டிலே தோன்றிய தென்னக வன்னிமைகள் பதினாறாம் நு}ற்றாண்டுவரை நிலைபெற்று வந்தன. விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரின் ஆட்சியிலே தொண்டை மண்டலத்திலுள்ள வன்னிமைகள் அழிந்தொழிந்தன.
பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின்பும் தென்னகத்திலிருந்து வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர்வசமிருந்த படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொலநறுவை அரசு அழிவுற்றதும் வன்னியநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள் எழுச்சிபெற்றுப் பல நு}ற்றாண்டுகளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும வளர்ச்சியடைந்திருந்தன.
இச்சிறு நு}ல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடுகளின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது. வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு என்பவற்றிலுள்ள பிரதான கட்டங்களே நு}லில் விளக்கப்பட்டுள்ளன. இந்நு}லின் இரண்டாம் பதிப்பில் வன்னியநாடுகளின் வரலாறு, சமூக அமைப்பு, சமூக வழமைகள் எனபன விரிவான முறையிலே இடம்பெறும்.
இந்நு}லை எழுதுமாறு ஊக்குவித்து, எழுதிய பின் பல நாட்களாகப் பிரதிகளைப் பார்த்துப் பிழைகளை நீக்கி நு}ல் சிறப்பாக அமைய வழிகாட்டிப் பின் அணிந்துரை அளித்து நு}லை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளுஞ் செய்து பேராதரவளித்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி. சு. வித்தியானந்தன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.
கயிலாய வன்னியனார் தர்மசாதனப் பட்டயத்தில் வரும் கிரந்த எழுத்துக்களை இலகுவில் வாசிப்பதற்கும் அதில்வரும் வடமொழிப் பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும் உதவி புரிந்த யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் வித்துவான் இ. பாலசுப்பிரமணியம் (சிறப்புக் கலைமாணி, இலங்கை) அவர்களுக்கும், யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் திரு. வி. சிவசாமி அவர்களுக்கும், அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபர் பண்டிதர் மு. சதாசிவம் அவர்களுக்கும், இந்நு}லைச் செவ்வனே அச்சேற்றிய சைவப்பிரகாச அச்சகத்தாருக்கும் நு}லாசிரியரின் நன்றிகள் பல.
சி. பத்மநாதன்
5-11-70
வரலாற்றுத்துறை,
இலங்கைப்பல்கலைக்கழகம்,
பேராதனை.
நமது இனம் ஒரு போர்க்குடி என்பதை நீங்கள் அறிவீர்கள்.இன்று உள்ள நமது சமுதாய நிலையும் அறிந்ததே. ஆனால் தமிழரசர் ஆட்சி வீழ்ந்த பிறகும் நமது மக்கள் எத்தகையோராய் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு செப்பேட்டினை பற்றி இங்கு கூறுகிறேன்."சித்தாண்டபுரம் செப்பேடு" எனக் குறிப்பிடப்படும் இச் செப்பேட்டைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தவர் நமது இன சரித்திர ஆசிரியர் "கல்வெட்டுச் செம்மல்" திரு.நடன்.காசிநாதன் அவர்கள்.
வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில் உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:
"சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்"
மற்றொரு பகுதி:
"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம் குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.
செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம் என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.
செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று கேட்டார்கள்"
விளக்கம்: சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர்.
ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.
ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள்.
வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.
இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
நண்பர்களே இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய செய்தி:
ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.
சரித்திர(முறையான) நூல்களில் தேவர் இனத்தவர் சேர,சோழ,பாண்டியர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.இடைக்காலச் சோழர் ஆட்சியில் நமது இனத்தவர் பெரும் செல்வாக்கு மிக்கோராக இருந்தமை கல்வெட்டுக்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.சோழர் காலத்திய சிற்றரசர்களான சம்புவராயர்,காடவராயர் போன்றோர் நமது இனத்தவர்.இதனை வரலாற்றுத் துறை உறுதிப்படுத்தியும் உள்ளது.
நமது இனத்தவர் குறுநில மன்னர்களாகவும் ,படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் இருந்துள்ளனர்.
படையாட்சி என்றால் காலாட்படை வீரன் என்பது சரியான பொருளன்று.
படை ,ஆட்சி - இதில் எந்தச் சொல் காலாட்கள் என்று அர்த்தம் தருகிறது?படை வீரன் -அவ்வளவே.
ஆனால் சரியான பொருள் "படை வீரர்களை ஆள்பவன்" என்பதே படை + ஆட்சி. படைவீரர்களை ஆள்வோன் என்ற பொருளைத்தான் தருகிறது.
கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன. உதாரணத்திற்கு
"ஓய்மாநாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன்"
இக்கல்வெட்டு வாசகம் பள்ளி(வன்னியர்) இனத்தவனான ராஜேந்திர சோழச் சம்புவராயனைக் குறிப்பிடுகிறது.
ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனப் பகுதியை உள்ளடக்கியது. நாலாயிரவன் என்பது நாலாயிரம் வீரர்களைக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது.
இந்த சம்புவராயன் நாலாயிரம் வீரர்களுக்குத் தலைவன் என்பதையே இக்கல்வெட்டு வாசகம் உணர்த்துகிறது.சம்புவராயர்கள் படைத்தளபதிகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தது வரலாறு .
சோழர் ஆட்சி நலிவுற்றிருந்தபோது ஒரு முறை சோழ மன்னர் ஒருவரைத் தோற்கடித்து சேந்தமங்கலம்(தென்னாற்காடு) சிறையில் வைத்த காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் நமது இனத்தவன்தான்.
கோப்பெருஞ்சிங்கன் சிற்றரசனாயிருந்தும் தனது வலிமையினால் ஏறக்குறைய பேரரசர் நிலையை அடைந்தவன்.
நமது இனத்தின் குலச் சின்னம் வில். நமது இனத்தவர் வில்லாற்றல் மிகுந்தோர்.சோழர்படைகளில் நமது இனத்தவர் விற்போர் வீரராயும் இருந்தனர். நமது இன வில் வீரர் கொண்ட படை "வில்லிகள் படை" எனப்பட்டது.சோழ மன்னர்கள் வில்லிகள் படை இருந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
ஜனநாதத் தெரிந்த வில்லிகள்,
பண்டிதசோழத் தெரிந்த வில்லிகள்,
உடையார்ப் படை தெரிந்த வில்லிகள்,
வீரநாராயணத் தெரிந்த வில்லிகள்
எனப் பல படைகள் சோழரிடமிருந்தது.வில்லாற்றலில் சிறந்தவர்களான பள்ளி(வன்னியர்) வீரர்கள் "வில்லிகள்" எனப்பட்டனர்.
படை வீரராயும், படைத்தளபதிகளாகவும்,சிற்றரசராகவும் நமது இனத்தவர் இருந்ததை எவராலும் மறுக்க இயலாது.சோழர்களின் வலிமைக்குக் காரணமாக விளங்கியோர் நாம்.பாண்டியர் பெருமதிப்பையும் பெற்றிருந்தவர் நமது இனத் தளபதிகள். பாண்டிய மன்னருக்குச் சமமான இருக்கையில் அமரும் தகுதியைப் பெற்றவர் நமது இனத் தளபதிகள்.வீரத்தில் நாம் யாருக்கும் சளைத்தவரல்ல.வீரம் எந்த இனத்தவரின் பொதுசொத்தும் அல்ல.
வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களே அங்கீகரித்து விட்டனர். அறிவிக்கையும் அமலில் உள்ளது. தமிழகத்தில் வன்னியர்களைத் தவிர வேறு யாருக்கும் ஷத்திரியப்பட்டம் சொந்தமில்லை.
இவற்றுக்கு ஆதாரங்கள் எண்ணற்றவை.
விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.
வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களுக்கு உள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்கு பொறுப்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாத முரட்டுக் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள். கிராமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை...
நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.
மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.
பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் = சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.
இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.
சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.
இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.
மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.
அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.
மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?
மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை. அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்லை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.
அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.
நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையே இருக்கிறது.
புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்
திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்
வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.